search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்  வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
    X

    சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

    • 13 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் தொடர்பு கொண்ட வாலிபருக்கு சிறை தண்டனை
    • சிறுமிக்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.செந்துறை அருகேயுள்ள சன்னாசி நல்லூர், நடுத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மணிகண்டன்(வயது32). இவர் ஈச்சங்காடு, பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் தனது சித்தப்பா வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற போது, 13 வயது சிறுமியை காதலித்து, அச்சிறுமியை கடந்த 15.07.2021 அன்று திருப்பூர் மற்றும் ஈச்சங்காடுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இது குறித்து புகாரின் பேரில் அரியலூர் மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றவாளி மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அவற்றை ஏகா காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வழக்குரைஞர் ராஜா ஆஜராகி வாதாடினார்.

    Next Story
    ×