search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்கள் போராட்டம்
    X

    ஆசிரியர்கள் போராட்டம்

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • ஏழாவது மத்திய குழு ஊதிய பரிந்துரையை அமல்படுத்தகோரிக்கை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.போராடத்தில், ஓய்வூதி யத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது மத்திய ஊதியக்குழு ஊதி யத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்க ளுக்கான ஊதிய முரண்பாடு களை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலக ங்கள்(தொடக்கக் கல்வி), வட்டாரக் கல்வி அலுவ லகங்களில் ஏற்ப ட்டுள்ள காலிப்ப ணிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேரவை (டெட்) ரத்துச் செய்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக முன்னுரி மைப்படி ஆசிரியர் நியமனங்களை செய்திட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறு த்தப்பட்டன.போராட்டத்துக்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் இரா.அசோகன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் இ.எழில் உண்ணா விரதத்தை தொடக்கி வைத்து பேசினார். முன்னாள் மாநில செயற் குழு உறப்பினர் க.பாலசுப்பி ரமணியன், முன்னாள் மாவட்டப் பொருளாளர் மா.மார்ட்டின் ஆரோ க்கியராஜ் ஆண்டிமடம் வட்டாரச் செயலர் இரா.வேல்மணி, மாநில பொதுக் குழு உறுப்பினர் சிவபாக்கியம், மாவட்ட பொருளாளர் தங்க.சிவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து, கோரிக்கை விளக்க உரை யாற்றினர். மாநில செயற் குழு உறுப்பினர் பெரம்பலூர் சு.முருகேசன், போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.


    Next Story
    ×