என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
- சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி
அரியலூர்:
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்திலுள்ள மத்திய அரசு நிறுவனங்களில், வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் அதிகளவில் சுண்ணாம்பு கனிமங்கள் சுரண்டப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணைச் செயலர் பகுத்தறிவாளன், மாநில மாணவரணிச் செயலர் அருள்பாபு, மாநில துணைப் பொதுச் செயலர் பழ.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்






