என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விக்கிரமங்கலம் அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்1 May 2023 5:51 AM GMT
- விக்கிரமங்கலம் அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி விக்கிரமங்கலத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் பள்ளியை அடைந்தது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி விக்கிரமங்கலத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்திய பதாகைகளுடன் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி சென்றனர் .இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா முன்னிலை வகித்தார். முன்னதாக விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியை , ஆசிரியர்கள் மாணவ , மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X