என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோயில்கள், நீர்நிலைகளில் சிறப்பு வழிபாடு
- கோயில்கள், நீர்நிலைகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- ஆடிப்பெருக்கு முன்னிட்டு நடைபெற்றது
அரியலூர்:
ஆடிப்பெருக்கை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள கோயில்கள் மற்றும் நீர்நிலைகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆடிப்பெருக்கை யொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. விழாவையொட்டி கோயில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடும் நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் நகரில் உள்ள சிவன் கோயில், பெருமாள் கோயில், மாரியம்மன் கோயில், செட்டிஏரி விநாயகர் கோயில், சுப்பிரமணியசுவாமி கோயில், திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் ஆடிப் பெருக்கையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு அரியலூர் நீதிமன்றம் அருகேயுள்ள அகோர வீரப்பத்திரசுவாமி கோயிலில் பால்குடத் திருவிழா நடைபெற்றது.பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, பால்குடம், தீச்சட்டி, அலகுகாவடி எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதே போல் திருமானூர், ெஜயங்கொண்ட ம், செந்துறை, தா.பழூர், பொன்பரப்பி, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதியிலுள்ள அனைத்து கோயிலில்களிலும் சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்