என் மலர்
உள்ளூர் செய்திகள்

விசாலாட்சி அம்பாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
- விசாலாட்சி அம்பாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- மலர் அலங்காரம் செய்யப்பட்டது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாதர் ஆலயத்தில் வைகாசி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அருள்மிகு விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் மற்றும் பிரகாரத்தில் வீற்றிருக்கும் வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு கிருத்திகை தினத்தை முன்னிட்டு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தணம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் வில்லேந்திய வேலவர் வண்ணமிகு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Next Story