என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம்
    X

    எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம்

    • அரியலூர் எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது
    • பொதுமக்களிடமிருந்து பெற்ற 17 கோரிக்கை மனுக்கள் மீது எஸ்.பி. விசாரணை மேற்கொண்டார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெற்ற 17 கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டார். பின்னர் அம்மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி விரைவில் தீர்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×