என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் குறித்து அவதூறு - திருமானூர் பா.ஜ.க. நிர்வாகி கைது
- இவர் அவரது முகநூல் பக்கம் மற்றும் சமூக வலைதளங்களில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.
- இதுகுறித்து தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகபாளயம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 39). இவர் பா.ஜனதா கட்சியின் திருமானூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ஆவார். இவர் அவரது முகநூல் பக்கம் மற்றும் சமூக வலைதளங்களில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story






