என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை
- மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
- மன உளைச்சலில் இருந்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வைத்தியநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன். விவசாயி. இவரது மனைவி வனிதா. இவர் அரியலூர் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகள் அபினா (வயது 16).
இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து பொதுத்தேர்வு எழுதினார். இந்த தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 600-க்கு 397 மதிப்பெண்கள் பெற்று அபினா தேர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில் மதிப்பெண் குறைவாக இருப்பதை கண்டு மன உளைச்சலில் இருந்தார்
நேற்று காலை பதினோரு மணி அளவில் தனது வீட்டில் தூக்கு மாட்டி உயிரிழந்தார். தகவலறிந்த வெங்கனூர் போலீசார் அபிராமி உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வெங்கனூர் போலீசார் விசாரணை செய்து வருகி–ன்றனர்.






