search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பாதிப்பு
    X

    அரியலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பாதிப்பு

    • அக் டோபரில் எந்த நாளிலும் நல்ல மழை பெய்யவில்லை என்று மாவட்ட வேளாண் மைத் துறை தெரிவித்துள் ளது.
    • ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் நெல் நடவு எதிர்பார்த்த அளவில் இல்லை.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கமாக 485 மி.மீ. மழையினை பெறும். வழக்கமாக இந்தப் பருவ மழை அக்டோபர் 3-வது அல்லது 4-வது வாரத்தில் தொடங்கும். ஆனால் நடப்பு ஆண்டில் பருவமழை தாமதமாக தொடங்கியது.

    இருப்பினும் கடந்த அக் டோபரில் எந்த நாளிலும் நல்ல மழை பெய்யவில்லை என்று மாவட்ட வேளாண் மைத் துறை தெரிவித்துள் ளது.

    பொதுவாக அக்டோபர் மாதத்தில் அரியலூர் மாவட் டத்தில் சராசரி மழைப்பதிவு 127.71 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் சென்ற மாதம் 44.29 மிமீ பதிவாகியுள்ளது. பற்றாக்குறை 76 சதவீதமாக உள்ளது. இந்த மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 954 மில்லி மீட்டர். இதில் வடகிழக்கு பருவமழை யின் போது 485 மில்லி மீட்டர் மழையும், தென் மேற்கு பருவமழையின் போது 357 மில்லி மீட்டர் மழையும், கோடையில் மழையளவு 83 மி. மீட்டர் மழையும் பெற்று வந்தது. ஆனால் ஜனவரியில் இருந்து இதுவரை 440.95 மி.மீ. மட்டுமே பெற்றுள்ளது.

    தென்மேற்கு பருவம ழையும் மாவட்டத்தில் சரியாக பெய்யவில்லை. ஜூன் மற்றும் செப்டம்பர் இடையே 231.74 மி.மீ., மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 140 மிமீ பதிவாகி யுள்ளது.

    இது பருவகால சராச ரியை விட 57 மிமீ அதிகம். அதே நேரம் அக்டோபரில் எந்த நாளிலும் கனமழை பெய்யவில்லை. இது பெருத்த ஏமாற்றம் அளிக்கி றது.

    இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவர் கூறும் போது,

    பொதுவாக அக்டோ பரில் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கு வார்கள். இந்த மாதத்தில் பெய்யும் மழை நெல் நாற்றுக்கு உதவும். இது நவம்பர் முதல் மற்றும் 2-வது வாரத்தில் வேகத்தை அதிகரிக்கும். ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் நெல் நடவு எதிர்பார்த்த அளவில் இல்லை.

    சம்பா சீசனில் வழக்கமாக 20,500 ஹெக்டேர் பரப்பள வில் நெல் நடவு செய்யப்ப டும். ஆனால் தற்போது மாவட்டத்தில் இதுவரை 7,300 ஹெக்டேர் பரப்ப ளவில் சாகுபடி நடந்துள் ளது. நெல் நடவு செய்த பெரும்பாலான விவசா யிகள், பாசனத்திற்கு பம்ப் செட்டை நம்பியுள்ளனர்.

    புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்தை உறுதி செய்த விவசாயிகள், இன்னும் சாகுபடி செய்யவில்லை. மேட்டூர் அணையில் நீர்வ ரத்து வேகமாக குறைந்து வருவதால், அணை மூடப்ப டுவதற்கு முன்பே, கால்வாய் மூடப்பட்டதால், இந்த ஆண்டு சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு சராசரி நெல் நடவு பரப்பளவை விவசாயிகள் எட்டுவது சந்தேகம் என்றார்.

    Next Story
    ×