என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே செவிலியர் வீட்டில் கொள்ளை
- 3 பவுன் சங்கிலி மற்றும் ெவள்ளி பொருட்கள் திருட்டு
- திருட்டில் ஈடுபட்டவர்களின் ஆதாரங்களை சேகரிக்கும் வகையில், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கடாரம் கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. (வயது 66). இவரது மகள் விஜய சரஸ்வதி. இவர் அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் தனது மகளை பார்ப்பதற்காக தங்கமணி வீட்டை பூட்டிவிட்டு அரியலூர் சென்றிருந்தார். அப்போது தங்கமணியின் வீடு திறந்து கிடந்ததை பார்த்த உறவினர், அவருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து கடாரங்கொண்டான் கிராமத்திற்கு வந்த தங்கமணி, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் ெவள்ளி பொருட்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் தங்கமணி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்டவர்களின் ஆதாரங்களை சேகரிக்கும் வகையில், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






