என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    அரியலூரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • அரியலூரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    அரியலூர்,

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர், அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை பணியாளர்கள் கோரிக்கைகளை ஆண்டு கணக்கில் நிறைவேற்றாமல் இருக்கும், கோட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பராமரிப்பு பணியை மேற்கொள்ள கருவி, பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களை சாலை பராமரிப்பு பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொலைதூரப் பணிகள் மேற்கொள்ள பயணப்படி வழங்க வேண்டும்.

    சாலை பணியாளர்களின் பொது சேமநல கணக்கிலிருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு உடனே பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு அச்ச ங்கத்தின் மாவட்ட த்தலைவர் பெ.காமராஜ் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். கோட்டச் செயலர் எம்.சிவகுமார், மாநிலத் துணைத் தலைவர் ச.மகேந்திரன், மாநிலச் செயலர்பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×