என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவமனை கட்ட கோரிக்கை
- நைனார்குடிகாடு கிராமத்தில் அரசு மருத்துவமனை கட்ட கோரிக்கை
- தமிழ்ப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலர் முடிமன்னன் தலைமையில் கலெக்டரிடம் மனு
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஆர்.எஸ்.மாத்தூர் அடுத்த நைனார்குடிகாட்டில் அரசு மருத்துவமனை கட்ட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம், தமிழ்ப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலர் முடிமன்னன், துணைச் செயலர் ஏ.கே.ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் ரகுபதி, அவைத் தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் மனுவை அளித்தனர்.
அந்த ஆர்.எஸ்.மாத்தூர் அடுத்த நைனார்குடிகாடு கிராமத்தில் அரசு மருத்துவமனை கட்ட வேண்டும். ஆர்.எஸ்.மாத்தூர் சித்தேரியில் வண்டல் மண் விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.மாத்தூரில் உள்ள காஞ்சனா ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும். அசான்வீரன் குடிகாடு ஊராட்சிக்கு கூடுதல் துப்புறவு பணியாளர் மற்றும் குப்பை வண்டிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
Next Story






