search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ஆவேசம்
    X

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ஆவேசம்

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ஆவேசத்துடன் கோஷங்களை எழுப்பினர்
    • சுரங்ப்பாதை கேட்டு போராடிய மக்களை தகாத வார்த்தையால் திட்டியதாக குற்றச்சாட்டு

    அரியலூர்,

    ஜெயங்கொண்டம் அருகேயுள்ள குறுக்குச் சாலையில், விக்கிரவாண்டி, தஞ்சாவூர் இடையே நான்கு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சுண்டிப்பள்ளத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளி அருகேயும், குறுக்குச் சாலையிலுள்ள ஹெலன் கெல்லர் பள்ளி அருகேயும் சுரங்கப் பாதையுடன் கூடிய அணுகுச் சாலை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர்.இதையடுத்து, வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின் போது, மேற்கண்ட கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்தார்.இந்நிலையில் மேற்கண்ட இடங்களில், தொடர்ந்து சாலைப் பணிகள் நடைபெற்று வருவதை அறிந்த அப்பகுதி மக்கள், குறுக்குச் சாலைப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர்(பொ)ஜெகன்நாத், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அநாகரிகமான வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், இன்ஸ்பெக்டருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் ஜெயங்கொண்டம் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலர் தமிழ்ச்செலவன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.மீனா, டி தியாகராஜன், பத்மாவதி ,சொக்கலிங்கம் பன்னீர்செல்வம், இந்திரா, ஞானசுந்தரி, கலைச்செல்வி ,சங்கீதா ,ரேவதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×