என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே  குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்
    X

    ஜெயங்கொண்டம் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

    • ஜெயங்கொண்டம் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • கடந்த ஒரு வார காலமாக ஏரியில் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுகிறது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம அருகேயுள்ள கொடுக்கூர் கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த ஏரியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு துர்நாற்றம் கடுமையாக வீசியது. இதனை அடுத்து கிராம மக்கள் குளத்தில் சென்று பார்த்தபோது மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதந்தது தெரியவந்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொடர்புடைய அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி மற்றும் நிர்வாக அலுவலர் செல்வம், போலீசார் பொதுமக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, கடந்த ஒரு வார காலமாக ஏரியில் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எனவே மீன்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உடனடியாக இறந்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளிடத்தில் தெரிவித்தனர்.பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் நடத்திய இப்போராட்டம் காரணமாக கொடுக்கூர்-ஜெயங்கொண்டம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×