search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
    X

    கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

    • கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    அரியலூர்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், இரண்டு கிராம நிர்வாக அலுவலர்களின் தற்காலிக பணி நீக்க ஆணையை ரத்து செய்ய வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும், பணிவரன் முறை தகுதிகான பருவம் நிறைவு செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.ராஜா தலைமை வகித்தார். செயலர் பாக்கியராஜ், மாநில பிரச்சார செயலர் அ.பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனற். மாநிலத் தலைவர் இரா.அழகிரிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

    Next Story
    ×