என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
- ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
- இதில் நந்திக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பல வண்ண மலர்களால் அலங்கரித்து தீபாராதணை காட்டப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள பெரியநாயகி உடனுறை கழுமலை நாதர் மற்றும் விருகாம்பிகை உடனுறை பலமலைநாதர் திருக்கோவிலில் மகா சனி பிரதோஷ வழிபாடு மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் நந்திக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பல வண்ண மலர்களால் அலங்கரித்து தீபாராதணை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story






