என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு
Byமாலை மலர்24 Oct 2023 7:18 AM GMT
- அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்
- நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 47). இவர் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சந்திரனை பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். சந்திரன் கடந்த 1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். இறந்து போன சந்திரனுக்கு சசிகலா (44) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X