என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
- மாரடைப்பால் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
அரியலூர்,
அரியலூர் மின்நகரில் வசித்து வந்தவர் பூபாலன்(55). இவர், அரியலூர் அடுத்த கயர்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடுகூர் கிராமத்தில் நெஞ்சுவலி வந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை பெற்று, அரியலூர் மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து கயர்லாபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இறந்த பூபாலனுக்கு ஒரு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.
Next Story






