என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலத்த மழையால் நடவு பணிகள் பாதிப்பு
- பலத்த மழையால் நடவு பணிகள் பாதிப்படைந்த
- திருமானூரில் அதிகபட்சமாக 15.5செ.மீ.,
அரியலூர்:
வடக்கு கேரளம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை தொடங்கி இரவு வரை விட்டுவிட்டு மழை பெய்தது. குறிப்பாக பிற்பகலில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நிலவரப்படி, திருமானூரில் அதிகபட்சமாக 15.5செ.மீ., அரியலூர் 5.2 செ,மீ. மழை பதிவானது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில், பல்வேறு பகுதிகளில் நடவு மற்றும் களை பறிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.
Next Story






