என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    அரியலூரில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • அரியலூரில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறையில் 10 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 750 குடும்ப ஓய்வூதியமாக வழங்கிட வேண்டும், அரசு துறையில் காலி பணியிடங்களில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி வழங்கிட வேண்டும், பணியில் உள்ளவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சிற்றுண்டித் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார்.செயலர் தமிழரசன், பொருளாளர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


    Next Story
    ×