என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை விபத்தில் முதியவர் பலி
- கோவிந்தசாமி அயன் ஆத்தூர் கிராமத்தில் இருந்து கடுகூர் கிராமத்திற்கு தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
- அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக கோவிந்தசாமி ஓட்டிவந்த மொபட் மீது மோதியது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் கடுகூர் கீழத்தெருவை சேர்ந்த ராமசாமியின் மகன் கோவிந்தசாமி(வயது 60). இவர் சம்பவதன்று அயன் ஆத்தூர் கிராமத்தில் இருந்து கடுகூர் கிராமத்திற்கு தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக கோவிந்தசாமி ஓட்டிவந்த மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கோவிந்தசாமியை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி இறந்தார். இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






