என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது விற்ற முதியவர் கைது
    X

    மது விற்ற முதியவர் கைது

    • அரியலூரில் மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • அவரிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கீழவெளி காலனி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 63) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×