என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • கவர்னரை கண்டித்து நடைபெற்றது
    • கண்டன கோஷம் எழுப்பப்பட்டது

    அரியலூர்,

    கவர்னரை நடவடிக்கையை கண்டித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் ஆளுநர் அரசுக்கு எதிராக பேசுவதை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இர.மணிவேல், கே.கிருஷ்ணன், து.அருணன், எம்.வெங்கடாசலம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×