என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மலேசியா முருகன் கோவிலுக்கு சென்றவர் உயிரிழப்பு
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் கிராமத்தைச் சேர்ந் தவர் கொளஞ்சி. இவருக்கும் இவரது மனைவி ராணி. இவர்களுக்கு திருமணமாகி சுமார் 28 ஆண்டுகள் ஆகி–றது. இந்த தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் இரண்டு பேருக்கு திருமணம் ஆகிவிட்டது.இந்த நிலையில் கொளஞ்சி குவைத் நாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற் பட்டது. இதையடுத்து மேற் கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இரு–தயத்தில் ரத்த அடைப்பு இருந்தது கண்டு–பிடிக்கப் பட்டது. இதற்காக அவர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண் டார். அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து, பூரண குணமடைந்தால் மலேசியாவில் உள்ள முருகன் கோவிலுக்கு வரு–வதாக கொளஞ்சி வேண்டி–யிருந்தார். இதையடுத்து அவர் ரூ.40 ஆயிரம் செலவு செய்து சுற்றுலா விசாவில் மலேசியா முருகனை வழிப–டுவதற்காக கடந்த 8 -ந்தேதி புறப்பட்டு சென்றார். இதற்கிடையே மலேசியா–வில் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங் குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனும–திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கேயே உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த கொளஞ்சி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து முறைப்படி அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி ராணி மற்றும் மகன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்