என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது
- ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல்
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கோரைக்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, கோரைக்குழி நடுத்தெருவை சேர்ந்த மோகன்தாஸ்(வயது 23) என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் இருந்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து மோகன்தாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






