என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது
- ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல்
- ரோந்து பணியின் போது சிக்கினார்
உடையார்பாளையம்,
உடையார்பாளையம் போலீஸ் எஸ்.ஐ. திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் பொட்டகொல்லை தெற்கு தெருவை சேர்ந்த காசிநாதன் மகன் அன்புமணி(53) என்பவர் வீட்டில் அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் அன்புமணியை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






