என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபருக்கு ஆயுள் தண்டனை
- வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது
- பாலியல் வன்கொடுமை வழக்கில்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பார்வையற்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து.
ஆண்டிமடம் அடுத்த சின்ன கிருஷ்ணாபுரம், கீழத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜ்மோகன்(வயது30). இவர், அதே பகுதியை சேர்ந்த பார்வையற்ற 36 வயதுடைய பெண்ணை கடந்த 02.04.2021 அன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அப்பெண்ணின் உறவினர் அளித்த புகாரின் பேரில், ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து ராஜ்மோகனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றவாளி ராஜமோகனுக்கு ஆயுள்சிறையும், ரூ.60ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்.






