என் மலர்
உள்ளூர் செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- அம்பேத்கருக்கு காவி உடை அணிந்ததை கண்டித்து நடந்தது
அரியலூர்:
அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பர் 6 ஆம் தேதி அன்று கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஓட்டப்பட்டிருந்த போஸ்டரில் அம்பேத்கருக்கு காவி உடையுடன் பட்டையிடப்பட்டதை கண்டித்தும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் அரியலூர் பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட செயலர் செல்வநம்பி தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு மாநிலச் செயலர் குணவழகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாநில பொருப்பாளர்கள் அன்பானந்தம், தனக்கோடி, கருப்புசாமி, ஆசிரியர் செல்வராஜ், தொகுதிச் செயலாளர்கள் மருதவாணன், இலக்கியதாசன், செய்தித் தொடர்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
Next Story






