என் மலர்
உள்ளூர் செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது
- கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்
- ‘நீட்’ தேர்வில் கவர்னர் கையெழுத்திடாததை கண்டிக்கும் விதமாக கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி
ஜெயங்கொண்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் ஒழுகச்சேரி கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சி விமான நிலையத்திலிருந்து திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக அணைக்கரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிர் வளவன் தலைமையிலான நிர்வாகிகள் 10 பேர் 'நீட்' தேர்வில் கவர்னர் கையெழுத்திடாததை கண்டிக்கும் விதமாக கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்தனர்.
இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாஸ்கரன் உள்ளிட்ட போலீசார் கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 10 பேரை கைது செய்து அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன், ஒன்றிய பொருளாளர் சக்கராயுதம் உள்ளிட்ட 9 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன்சுருட்டி போலீசார் கைது செய்தனர்.






