search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்ட விழிப்புணர்வு முகாம்
    X

    சட்ட விழிப்புணர்வு முகாம்

    • நீதிபதி மகாலெட்சுமி தலைமையில் நடடைபெற்றது
    • மக்கள் பிரச்சினைகள் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று உறுதி

    அரியலூர்,

    அரியலூர்மாவட்டம், திருமானூர்ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் பாதிக்கப்பட்டவர் கள், கடத்தல், மற்றும் வணிகரிதியான பாலியல் சுரண்டல் குறித்த சட்டஉதவி மற்றும் சட்டவிழிப்புணர்வு முகாம் மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவருமான மகாலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது : -மக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தயங்காமல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழு அலுவலகத்தை நேரில் அணுகினால் இருதரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்து சுமூக தீர்வு காண்பதற்கு ஏற்பாடு செய்து தரப்படும். மக்கள் நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமை பறிபோகக்கூடாது. படிப்பறிவு இல்லை என்பதற்காகவும் ஏழ்மை என்பதற்காகவும் எழுத்தறிவு இல்லை என்பதற்காகவும் நீதி மறுக்கப்படக்கூடாது. நீதி மன்றத்தையும், காவல்து றையையும் மக்கள் ஒதுக்கி வைக்கிறார்கள். ஒரு வழக்கு முடிவதற்கு குறைந்தபட்சம் 5 வருட காலம் நீடிப்பதாலும் மக்கள் மிகவும் விரக்தியாகிறார் கள். பல நாட்கள் கழித்துதான் தீர்ப்பு கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான். சட்டம் ஒரு நியதிக்கு உட்பட்டுதான் இயங்கும். இது நடைமுறை சிக்கல்கன், காலதாமதம் போன்ற இடர் பாடுகளினால் ஏற்படுகின்றது.இதனால் மக்களுக்கு விரக்தி ஏற்பாடாமலிருக்க வேண்டும் என்தன் பொருட்டு மாவட்ட வாரியாக தீர்வு காண்பதற்கு மாற்றுமுறை தீர்வாக சட்டப்பணிகள் ஆணைக்குழு ஒரு அங்கமாகநியமிக்கப்பட்டது.எல்லா பிரச்சனைகளும் நீதிமன்றங்கள் மாதிரியே எடுத்துக்கொள்ளும். அதாவது, முக்கியமாக குற்றவியல் வழக்கு, கொலை வழக்கு, குடும்ப வழக்கு, அடிதடி வழக்கு மற்றும் கணவன், மனைவி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், சொத்து பிரச்சனைகள், விபத்து வழக்குள் குறித்து தீர்வு காண சுமூகமாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழுவை அணுகலாம். மக்கள் நேராக வந்து தமது பிரச்சனையை சொன்னால் போதும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் மிக விரைவில் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

    மேலும் மக்கள் பயனடையும் வகையில் ஒவ்வொரு தாலுக்காவிலும் சட்டப்பணிகள் குழு இயங்குகிறது என்றும் கூறினார்.சட்ட பணிகள் ஆணைக்குழு செய லாளர் அழகேசன் முன்னிலை வகித்தார், திருமா னூர்ஊராட்சி மன்ற தலைவர் உத்திராபதி வரவேற்று பேசினார், வக்கில் சங்க பொறுப்பாளர் மனோகரன், செல்வராஜ், முத்துகுமார், செந்தி ல்குமார், தேவேந்திரன், காவல்ஆய்வாளர் சகாயம் அன்பரசு, சட்ட பணிகள் நிர்வாக அலுவலர் வெள்ளை சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர், நிகழ்ச்சி முடிவில் ஊராட்சி மன்ற துணைதலைவர் மணிமாறன் நன்றி கூறினார்.


    Next Story
    ×