என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரிகள் ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்த வழக்கறிஞர்கள்
    X

    ஏரிகள் ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்த வழக்கறிஞர்கள்

    • மேலண்குழியில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளின் நிலைகளை ஐகோர்ட் வக்கீல்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
    • நான்கு ஏரிகளில் ஆய்வு நடத்தப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், பாப்பாக்குடி அருகேயுள்ள மேலண்குழி ஊராட்சியில் 32 ஏக்கர் பரப்பளவு கொண்ட 4 ஏரிகள் ஆக்கமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஊராட்சித் தலைவர் முத்துக்குமாரசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஆக்கிரமி க்கப்பட்ட ஏரிகளை ஆய்வு செய்ய வழக்குரைஞர் மது தலைமையில் குழு அமைத்தது. இந்த குழு, மேலண்குழியிலுள்ள 4 ஏரிகளையும் ஆய்வு செய்தது.அப்போது வழக்குரை ஞர்கள் குழுத் தலைவர் மது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-இப்பிரச்னையை பார்க்கும் போது நாட்டில் நடக்கும் தவறுகள் அரசியல் வாதிகள் உடையது இல்லை என்பது தெரியவருகிறது.இந்த தவறுகள் முழுவதும் அதிகாரம் உள்ளவர்களால் நடக்கிறது. வருவாய் துறையும் , காவல்துறையும் நேர்மையாக இருந்தால் இது போன்று தவறுகள் நடக்காது. இவர்களது தவறுகளினால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.எனவே எங்களது ஆய்வுப் பணிகளை சிறப்பாக செய்துள்ளோம்.ஆய்வு அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும்.

    Next Story
    ×