search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்
    X

    கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்

    • கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது
    • 20 கிடேரி கன்றுகளுக்கு அடையாள காது வில்லைகள் அணிவிக்கப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கடுகூர் அடுத்த கோப்பிலியன் குடிகாடு கிராமத்தில் கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் திடுப்பூசி செல்லுத்தும் முகாம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற முகாமை, ஊராட்சித் தலைவர் தர்மலிங்கம் தொடக்கி வைத்தார். அரியலூர் மண்டல இணை இயக்குநர்(பொ)சுரேஷ்கிரிஸ்டோபர், கோட்ட உதவி இயக்குநர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார், கால்நடை ஆய்வாளர் மாலதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு, 4 முதல் முதல் 8 மாதம் வரை உடைய 20 கிடேரி கன்றுகளுக்கு அடையாள காது வில்லைகள் அணிவிக்கப்பட்டு கருச் சிதைவு நோய் தடுப்பூசிகளை செலுத்தினர்.மேலும் இம்முகாமில், மாடுகளில் கருச்சிதைவு நோய் பற்றிய விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டது.


    Next Story
    ×