என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் கடை பணிக்கு நேர்முகத் தேர்வு
    X

    ரேசன் கடை பணிக்கு நேர்முகத் தேர்வு

    • ரேசன் கடை பணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது
    • 14 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில், கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டிலுள்ள நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட கூட்டுறவுத் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 75 விற்பனையாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வரை பெறப்பட்டது. தகுதியானோருக்கான நேர்முகத் தேர்வு அரியலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தின் மாணவர் தங்கும் விடுதியில் வரும் 14 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேற்படி நேர்முகத் தேர்வுக்கு வரும் மாற்றுத்தினாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட பதிவு புத்தகம், அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட சான்றிதழ், தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×