என் மலர்
உள்ளூர் செய்திகள்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை
- ஜெயங்கொண்டம் பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
- கணக்கில் வராத ரூ.6 ஆயிரம் பறிமுதல்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சந்திரசேகர் மற்றும் செந்துறை துணை வட்டாட்சியர் ராமலிங்கம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பவுன்ராஜ், ரவி மற்றும் போலீசார் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென நுழைந்து ஆய்வு செய்தனர். ஆய்வில் கணக்கில் வராத ரூ 6 ஆயிரம் தொகையை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்திரப்பதிவு அலுவலக பொறுப்பு சார்பதிவாளர் பிரகாஷ் மற்றும் உள்ளே இருந்த அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






