என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குண்டர் சட்டத்தில் கைது
- விஸ்வ இந்து பரிஷத்அ ரியலூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- எஸ்.பி.பரிந்துரையின் பேரில் கலெக்டர் உத்தரவு
அரியலூர்,
அரியலூர் கீரைக்காரத் தெருவைச் சேர்ந்தவர், பி.முத்துவேல்(வயது 39). விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச்செயலாளரான இவர், அரியலூர் லூர்து அன்னை ஆலயத்தி ன்பங்குத்தந்தை டோமினிக் சாவியோவை (வயது 54), மிரட்டி ரூ.25 லட்சம்பணம் பறிக்க முயற்சிசெய்த வழக்கில்கைது செய்ய ப்பட்டு சிறையில் உள்ளார்.கிறிஸ்துவ மத போதகர்களை மிரட்டியது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் குறித்து அவதூறு பரப்பியது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து முகநூலில்அவதூறாக பரப்பியது, கிறிஸ்தவ கடவுள்களை இழிவுப்படுத்தியது, கடைக்காரர்களைப் பணம் கேட்டு மிரட்டியது என அரியலூர் மாவட்டக் காவல் நிலையங்களில் முத்துவேல் மீது 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் தொடர்ந்து மாவட்டத்தில் மக்களிடையே மத மோதல்களை தூண்டி விட்டு வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், முத்துவேலை குண்டர்சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்