search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ் டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
    X

    அரசு பஸ் டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

    • அரசு பஸ் டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
    • பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், கொடுக்கூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் ராமலிங்கம்( வயது 53). இவர் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 24.11.2021 அன்று பிளஸ்-1 மாணவி ஒருவர் வீட்டில் இருந்தபோது அவரை கட்டி பிடித்து, நெற்றியில் முத்தம் கொடுத்துள்ளார். உடனடியாக அந்த மாணவி அவரை தள்ளிவிட்டு ஓடிவந்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக இதுகுறித்து அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீல் ராஜா வாதாடினார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஆனந்தன் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் ராமலிங்கத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    Next Story
    ×