என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- அரியலூரில் அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- மகப்பேறு மருத்துவர்களின் பணியிடங்கள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்
அரியலூர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலரை பணி நீக்கம் செய்ய வேண்டும். மகப்பேறு மருத்துவர்களின் பணியிடங்கள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும். கூடுதல் மகப்பேறு மருத்துவர்களை உடனடியாகபணியமர்த்தப்பட வேண்டும். அரசு மகப்பேறு மருத்துவர்களை மென்டாரிங் முகாம்கள் போன்றவற்றில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். மகப்பேறு இறப்பு தணிக்கையில், மருத்துவர்கள் அளித்த சிகிச்சை சம்பந்தமான தணிக்கையை மாநில அளவில் மூத்த மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் உயர்மட்ட குழுவை கொண்டு முறையாக நடத்த வேண்டும்.தற்போது நடைமுறையில் உள்ள ஆறு விதமான தணிக்கைகளை மாற்றி ஒரு தணிக்கை மட்டுமே நடத்தப்படவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மருத்துவர் கொளஞ்சிநாதன் தலைமை தாங்கினார். அரசு மருத்துவர்கள் கண்மணி, அறிவுச் செல்வன், ஷபி, மகப்பேறு மருத்துவ துறைத் தலைவர் பிரசன்னா, மருத்துவர் சுகந்தி, பிரியா சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






