என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்க வேண்டும் - கலெக்டர் தகவல்
- விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்க வேண்டும் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
- பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்டத்தில் பயன்பெறும்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்டத்தில் பயன்பெ––றும் விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்க வேண்டும் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறி–ப்பில் கூறியிப்பதாவது :
அரியலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,04,055 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில், விவசாயி–களுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இத்தொகையானது, விவசாயிகளின் வாழ்வா–தாரத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 10 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்ப–ட்டுள்ளது. தற்போது 11வது தவணை தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. இனிவருங்காலங்களில் விவசாயிகள் 12 ஆவது தவணைத் தொகையை பெறுவதற்கு தங்களது ஆதார் விபரங்களை சரிபார்த்தல் மற்றும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது அவசியம் ஆகும்.
தங்களது ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, ஓ.டி.பி மூலம் சரிபார்த்துக் கொள்ள–லாம்.
ஆதார் எண்ணுடன், கைப்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி, பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்க–ளது ஆதார் எண் விபர–ங்களை உள்ளீடு செய்து, தங்களது விரல் ரேகையை பதிவு செய்து, விபரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.
இதற்கான கட்டணமாக ரூ.15 இசேவை மையங்களுக்கு செலுத்த வேண்டும். இந்த இருமுறைகளில் ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகளான விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
மேலும் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்த்து, இணை–க்கப்படவில்லை எனில் 12 ஆவது தவணை பெறுவதற்கு முன்னர் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர்ரமண சரஸ்வதி தகவல் தெரிவித்துள்ளார்.






