என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் முப்படை வீரர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    முன்னாள் முப்படை வீரர்கள் ஆர்ப்பாட்டம்

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
    • முன்னாள் முப்படை வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


    அரியலூர்,

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே முன்னாள முப்படை வீரர்கள் நலச் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், இந்திய ராணுவத்தை அவதூறாக பேசிய சாட்டை சரவணனை தேச விரோத சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி ராணுவீரர் பிரபுவை கொலைச் செய்தவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்கயத்தாரில் முன்னாள் ராணுவீரர் சுப்புராஜை தாக்கியவர்க ள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்திலுள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.அரியலூரில் ராணுவ கேண்டின் மற்றும் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டதுஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பொருளாளர் பாண்டியன், நிர்வாகி சூசைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

    Next Story
    ×