என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம்
    X

    போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம்

    • போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
    • போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து தப்பாட்டம், பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலையம் முன்பு மற்றும் இராயம்புரம், பொய்யாதநல்லூர், பொன்பரப்பி, ஆர்.எஸ்.மாத்தூர் போன்ற இடங்களில் மது விலக்கு ஆயதீர்வை துறை சார்பாக விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மதுவிலக்கு தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் ஓசைக்கலைக்குழுவினர் பங்கேற்று மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து தப்பாட்டம், பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சிகளில் கலால் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ், வருவாய் ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல் பேருந்து நிலையம் மற்றும் அண்ணாநகர் பிரிவு சாலையிலும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    Next Story
    ×