search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் - ேத.மு.தி.க. சார்பில் நடந்தது
    X

    அரியலூரில் உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் - ேத.மு.தி.க. சார்பில் நடந்தது

    • அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் தேமுதிக சார்பில் உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் அவைத்தலைவர் மதி, மாவட்ட பொருளாளர் வேல்முருகன், மாவட்ட துணைச் செயலாளர் தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரியலூர் :

    அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் தேமுதிக சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாவட்ட செயலாளர் இராம ஜெயவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் அணி துணைச் செயலாளரும், அரியலூர் மாவட்ட தேர்தல் ஆணையாளர் பாலமுருகன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்,

    இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் மதி, மாவட்ட பொருளாளர் வேல்முருகன், மாவட்ட துணைச் செயலாளர் தெய்வசிகாமணி, தங்கஜெயபாலன், தேன்மொழி சம்பத், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், முத்து, பொதுக்குழு உறுப்பினர் ஜேக்கப், தொழிற்சங்க செயலாளர் பாண்டியன்,

    ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், ஜெகதீசன், அறிவழகன், குமாரதேவன், செல்வராஜ், நகரச் செயலாளர் சின்னபாண்டு, முனியசாமி, தாமஸ் ஏசுதாஸ், உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டம் முடிவில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    Next Story
    ×