என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    • கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டி மடம், செந்துறை ஆகிய பகுதிகளில் கிராமநிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ரத்து செய்யப்பட்ட பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க ே வண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பயணப்படியை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பேரிடர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும் வருவாய்த்துறையின் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

    நகர நிலவரித் திட்ட கணக்குகளை முழுமையாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். முடக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மணி வண்ணன், செந்துறையில் வட்டாரத் தலைவர் இளையராஜா, ஆண்டிமடத்தில் மாவட்ட துணைச் செயலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    Next Story
    ×