என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை அமைத்து தர கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
    X

    சாலை அமைத்து தர கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

    • சாலை அமைத்து தர கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • சாலை மறியலிலும் ஈடுபட்டனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட அருகே மீன்சுருட்டியில் இருந்து கல்லாத்தூர் செல்லக்கூடிய 16 கிலோ மீட்டர் சாலையை சீரமைக்கவும், ஏற்கனவே உள்ள சாலையில் வெத்தியார் வெட்டு கிராமம் அருகே 600 மீட்டர் சாலையே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைவிட அதிகமான தரம் இல்லா சாலைகளுக்கெல்லாம் கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.

    மீன்சுருட்டி - குட்ட கரைக்கு கூட மாநில அரசினுடைய மாவட்ட சாலையாக மாற்றம் செய்து புனரமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அதே போல மீன்சுருட்டில் இருந்து கல்லாத்தூர் ரோடு மாவட்ட நெடுஞ்சாலையாக அறிவிக்காத காரணத்தினால் இந்த பகுதி பின்தங்கிய சூழலை ஏற்பட்டுள்ளது.

    எனவே இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி 5 கிராம மக்களை அணி திரட்டி இன்றைய தினம் மறியல் போராட்டம் நடத்தி உள்ளோம்.

    இந்த போராட்டத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு உடனடியாக நிதிநிலை பற்றிய காரணம் சொல்லாமலும் ஆறு மாதங்களுக்கு பிறகு பார்க்கிறோம் என்று காரணம் சொல்லாமலும் உடனடியாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நாளைய தினம் இந்த மாவட்டத்திற்கு வர இருக்கின்ற சூழ்நிலையில் இந்த பாதையினுடைய மிக மோசமான சூழ்நிலை கணக்கில் எடுத்துக் கொண்டு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பாதையை தரம் உள்ள தார் சாலையாக மாற்றம் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    இல்லாவிட்டால் மீண்டும் டிசம்பர் 11 ஆம் தேதி முற்போக்கு சிந்தனையாளர் இயக்கமும், கிராம பொதுமக்கள் அனைத்து பேரும் ஒன்று சேர்ந்து மீண்டும் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவோம்.

    Next Story
    ×