என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம நிர்வாக உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    கிராம நிர்வாக உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது
    • பணிக்கொடை வழங்க கோரி கண்டன கோஷங்கள்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.மாநில தலைவர் ராஜசேகர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.முன்னதாக மாவட்ட செயலாளர் கணபதி வரவேற்று பேசினார். இதில் புது சுகாதாரத்துறை மாநில செயலாளர் ராஜா, கிராம உதவியாளர் சங்க மாநில மகளிர் அணி செயலாளர் சுகுணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலத்தில் சி.பி.எஸ்.ஐ ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் சி.பி.எஸ்.ஐ ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தி.மு.க.வின் 2021 தேர்தல் கால வாக்குறுதி 309ன் படி சி.பி.எஸ்.ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும் பணிக்கொடை வழங்க கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆண்டிமடம் வட்டத் தலைவர் வேல்முருகன் நன்றி கூறினார்.

    Next Story
    ×