என் மலர்
உள்ளூர் செய்திகள்

விசிக ஆர்ப்பாட்டம்
- விசிக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய கோரி
அரியலூர்:
அம்பேத்கர் சிலையை அவமதித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய கோரியும், மயிலாடுதுறை பட்டவர்த்தி கிராமத்தில் தடையை அகற்றக் கோரியும்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆருப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் சிவகுமார் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் இலக்கிய தாசன் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வநம்பி, மாநில துணைச் செயலாளர் ஆசிரியர் செல்வராஜ், மாவட்ட அமைப்பாளர் சின்னராஜா, நகர் மன்ற உறுப்பினர் காஞ்சனா சரவணன், சுந்தர் ஒன்றிய செயலாளர் வடக்கு பாரதி, தெற்கு ஒன்றிய செயலாளர் காமராஜ் மற்றும் உடையார்பாளையம் நகர செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட அமைப்பாளர்கள் மகளிர் அணி மாவட்ட பொறுப்பாளர் திலகவதி, துர்கா, தேவிசதன் மற்றும் இளையபாரதி, மாயாண்டி குமரவேல், செந்தில், மாரிமுத்து, சத்யானந்தம், தங்க அருள், சத்யநாதன், சக்திவேல், தொட்டிக்குளம் சங்கர், சக்திவேல், மணிமாறன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.






