search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.46 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
    X

    ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.46 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்து ரூ.46 லட்சத்துக்கு ஏலம் போனது
    • 336 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது

    அரியலூர்,

    பெரம்பலூர் விற்பனைக்குழுவிற்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனைக்கூடத்தில் பருத்தி கொள்முதலுக்கான மறைமுக ஏலம் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மறைமுக ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், சேலம், திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் நன்கு உலர வைத்து கொண்டு வந்திருந்த பருத்தியை நல்ல விலை கோரி கொள்முதல் செய்தனர். இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 657-க்கு விலை போனது. குறைந்த பட்சமாக பருத்தி குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 869-க்கும், சராசரி விலையாக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 419-க்கும் விலை போனது.

    மறைமுக ஏலத்தில் மொத்தம் 734.92 குவிண்டால் பருத்தி 336 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. மறைமுக ஏலம் மூலம் ரூ.46 லட்சத்து 17 ஆயிரத்து 629-க்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு, வேளாண்மை துணை இயக்குனர் கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×