என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு முகாமிற்கு அரசு பேருந்தில் சென்ற கலெக்டர்
- மக்கள் தொடர்பு முகாமிற்கு கலெக்டர் அரசு பேருந்தில் சென்றார்
- ரூ.41.63 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த சன்னாசிநல்லூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மை துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு 213 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.41.63 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரமணசரஸ்வதி வழங்கினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன்,த மிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திட்ட அலுவலர் சிவக்குமார், கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.
முன்னதாக இந்த முகாமுக்கு கலெக்டர் அலுவலகத்திலிருந்து கலெக்டர் ரமணசரஸ்வதி உட்பட அனைத்து துறை அலுவலர்களும் ஒரே அரசுப் பேருந்தில் சென்றனர். கடந்த மாதம் கடம்பூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமுக்கும்,ஒரே அரசுப் பேருந்தில் கலெக்டர் உட்பட அரசு அலுவலர்கள் சென்று வந்தனர். டீசல் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகைில் மாதந்தோறும் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு, ஒரே வாகனத்தில் செல்ல ஏற்பாடுசெய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






