search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சதுரங்க ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    சதுரங்க ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • சதுரங்க ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடத்தப்பட உள்ளது.

    அரியலூர்:

    சர்வதேச அளவிலான 44-வது சதுரங்க ஒலிம்பி–யாட் போட்டிகள் மாமல்ல–புரத்தில் வருகிற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெறவுள்ளது. 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளை மாவட்ட–ங்களில் பிரபலப்படுத்தும் வகையில் சதுரங்க போட்டி–கள், விழிப்புணர்வு பேரணி, மாரத்தான், இருசக்கர வாகனப் பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் சம்ம–ந்தப்பட்ட மாவட்ட நிர்வா–கத்தின் சார்பில் தொடர்ந்து மேற்கொ–ள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் செஸ் ஒலிம்பி–யாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி, வட்டார, மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    அதனடிப்படையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி அளவில் மாணவ, மாணவியர்களுக்கு சதுரங்க போட்டிகள் நடத்தி முடி–க்கப்பட்டுள்ளது. இதில் அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், தா.பழூர், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வட்டாரங்களில் உள்ள சுமார் 300 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 1 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி அளவில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த பள்ளி அளவிலான சதுரங்க போட்டிகளில் ஒவ்வொரு பள்ளிகளிலிருந்தும் முதல் 2 இடங்களை பெற்ற தலா 2 மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்க–ப்பட்டு–ள்ளனர்.

    இவ்வாறு தேர்ந்தெ–டுக்கப்ப–ட்டவர்களுக்கு வரும் 20-ந் தேதி அன்று வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் நடத்தப்பட உள்ளது. வட்டார அளவி–லான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வரும் 25-ந் தேதி அஸ்தி–னாபுரம் மாதிரி பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடத்தப்பட உள்ளது.

    Next Story
    ×