என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலகுடியிருப்பு பள்ளியில் காலை உணவுத் திட்டம்; கலெக்டர் ஆய்வு
    X

    மேலகுடியிருப்பு பள்ளியில் காலை உணவுத் திட்டம்; கலெக்டர் ஆய்வு

    • மேலகுடியிருப்பு பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினை கலெக்டர் ஆய்வு செய்தார்
    • மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் சரியான நேரத்திலும் தொடர்ந்து தயார் செய்து வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு, அவர் உத்தரவிட்டார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட மேலக்குடியிருப்பு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் விரிவுப்படுத்தப்பட்ட முதல்வரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா ஆய்வு செய்தார். காலை உணவுத் திட்டத்துக்கு தயாரிக்கப்படும் உணவின் தரம், உணவு பொருள்கள் இருப்பு மற்றும் அவற்றின் தரம், சரியான நேரத்திற்கு உணவினை பள்ளிகளுக்கு கொண்டு செல்லுதல் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினையும் சாப்பிட்டு உணவின் தரம் குறித்தும் பரிசோதித்தார்.

    மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் சரியான நேரத்திலும் தொடர்ந்து தயார் செய்து வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு, அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆறுமுகம், வட்டாட்சியர் துரை, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×